பணம் காய்க்கும் அதிசய வாழை..? கூரையை பிய்த்துக்கொட்டிய துட்டு மிரள வைத்த போலீசாரின் பதுக்கல் யுக்தி அதிர்ந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்

Update: 2023-04-14 02:48 GMT

கேரளா மாநிலம் பாலக்காடு சோதனை சாவடியில் பணம் காய்க்கும் வாழை மரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், தமிழக-கேரளா எல்லையான நடுப்புனி சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அவ்வாறு வரும் வாகன ஓட்டிகளிடம் சோதனையில் ஈடுபடும் போலீசார் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடைப்படையில் நடுப்புனி சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வாழை மரங்களில் 500 மற்றும் 100 ரூபாய் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மேற்கூரை ஓட்டில் இருந்தும் 8 ஆயிரத்து தொள்ளாயிரம் ரூபாயை மீட்டனர். விசாரணையில், அலுவலக உதவியாளர் விஜயகுமார், லைப் ஸ்டாக் இன்ஸ்பெக்டர் ஷாஜி, கள அலுவலர் அசோகன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்று, அதனை வாழை மரங்களிலும், அலுவலக மேற்கூறையிலும் மறைத்து வைத்திருந்த‌து தெரிய வந்த‌து. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்