இலங்கை சென்ற எல்.முருகன், அண்ணாமலை - பெண்கள் ஆரத்தி எடுத்த உற்சாக வரவேற்பு

Update: 2023-02-10 02:52 GMT

   இந் திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.

இலங்கையின் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த, இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இந்த குழு, இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினை அதிகாரபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்