கோவில் திருவிழாவில் அரைகுறை ஆடையுடன் நடனம்

Update: 2023-06-15 03:53 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பொன்னியந்தல் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீதிமன்ற உத்தரவை மீறி அரைகுறை ஆடைகளுடன், ஆபாசமான முறையில் கலைஞர்கள் நடனம் ஆடியுள்ளனர். மேலும், விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடந்ததாகவும் தெரிகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்