மோர்பி பாலத்தால் பலியான 140 உயிர்களுக்காக துக்கம் அனுசரிப்பு - முதலமைச்சர் பூபேந்திர பட்டேல்

Update: 2022-11-01 04:25 GMT

மோர்பி பாலத்தால் பலியான - 140 உயிர்களுக்காக துக்கம் அனுசரிப்பு

குஜராத்தில் தொங்கு பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக, நவம்பர் 2ஆம் தேதி மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குஜராத் காந்திநகர் ராஜ்பவனில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குஜராத் தொங்கு பாலம் விபத்தில் இறந்தவர்களுக்கு நவம்பர் 2 ஆம் தேதி மாநிலம் தழுவிய துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்