கோயில் திருவிழாவில் கேங் வார்.. கட்டை, கற்களால் பயங்கர தாக்குதல் - பரபரப்பு காட்சிகள்

Update: 2023-06-13 05:37 GMT

தண்டேஸ்வர நல்லூர் பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா, நடைபெற்று வருகிறது. இதில் முன்விரோதம் காரணமாக, வடக்கு தெரு இளைஞர்களுக்கும் - இபி இறக்கம் இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்டை, கற்களால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்ட நிலையில், அங்கிருந்த இருசக்கர வாகனத்தை சாக்கடையில் தள்ளி விட்டு, மோதலில் ஈடுபட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிதம்பரம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்