Service கடைக்குள் புகுந்து 100 செல்போன்களை லாவகமாகத் திருடிய கும்பல் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2023-03-19 11:25 GMT

திண்டுக்கல்லில் செல்போன் பழுதுபார்க்கும் கடையில் பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் 100 செல்போன்களை 3 மர்ம நபர்கள் இரவோடு இரவாக திருடிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. புது பென்ஷனர் தெருவில் இயங்கி வரும் செல்போன் பழுது பார்க்கும் கடைக்குள் இரவு நேரத்தில் தெருவில் ஆள்நடமாட்டம் இல்லாத போது புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்து சுமார் 100 செல்போன்களைத் திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இவை அனைத்தும் பழுதுக்காக வந்திருந்தவை என்பதால் வாடிக்கையாளர்களும் கடை உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்