வரதட்சணையாக கப்பல் வேலை வாங்கி தந்தும் தீராத பேராசை.. கருவை கலைக்க மிரட்டல் - உடைந்த கையுடன் கதறும் காதல் மனைவி

Update: 2023-03-07 08:38 GMT
  • வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்ததாக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, உடைந்த கையுடன் பெண் புகார் அளித்துள்ளார்...
  • சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் பிரவீன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
  • இதனிடையே புவனேஸ்வரியின் பெற்றோர் 40 சவரன் நகை, வீட்டிற்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொடுத்து, பிரவீனுக்கு கப்பலில் வேலையும் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் 100 சவரன் நகை, கார் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணையாக கேட்டும், கர்ப்பமாக இருந்தபோது கருவை கலைக்க சொல்லியும், கணவன், மாமியார் மற்றும் மாமனார் சித்திரவதை செய்வதாக புவனேஸ்வரி புகார் தெரிவித்த நிலையில், போலீசார் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
  • இதனிடையே, பிரவீன் தனது மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, புவனேஸ்வரி தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்