கடவுளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு - 201 பேர் பலி

Update: 2023-05-15 08:32 GMT

மாலிண்டி நகரில் பாதிரியார் பால் மெக்கன்சியின் பேச்சைக் கேட்டு கிராம மக்கள் கடவுளைக் காண வேண்டும் என்ற விருப்பத்தில் பல நாட்களாக உணவு தண்ணீர் இன்றி இருந்துள்ளனர். மெக்கன்சிக்கு சொந்தமான பண்ணையில் இருந்து மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த பட்டினி வழிபாட்டால் பலியானவர்கள் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளது. இவ்வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனதாகக் கூறப்படுவதால் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்