கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 6 பேர் கைது - தடுமாறி விழுந்து 2 பேருக்கு கை முறிவு

Update: 2023-02-03 08:43 GMT

சென்னை கொடுங்கையூரில் இரு சக்கர வாகனங்களில் சென்று கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை சந்திப்பில், கொடுங்கையூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வேகமாக வந்த 6 பேர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர்.

அவர்களில் ஒரு வாகனத்தில் வந்தவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

மற்றொரு வாகனத்தில் வந்த மூன்று பேர் தப்பிச் சென்றபோது, அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர்.

அப்போது இருசக்கர வாகனம் கீழே விழுந்தில், இரண்டு பேருக்கு கை முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்