நடுரோட்டில் பையுடன் கட்டுக்கட்டாக கிடந்த பணம் | அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்

Update: 2022-08-17 02:29 GMT

நடுரோட்டில் பையுடன் கட்டுக்கட்டாக கிடந்த பணம் | அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்


திருவாரூர் அருகே காட்டூரில், மோகன்ராஜ் என்பவர், கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வங்கிக்கு சொந்தமான 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை, மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்துவதற்காக, மோகன்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கமலாலயம் மேல்கரை பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து பணப்பை கீழே விழுந்தது தெரியாமல், மோகன்ராஜ் வங்கிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து மோகன்ராஜ் பணத்தை தவறவிடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்