சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. | sabarimala | ayyappa | temple | kerala | thanthi tv

Update: 2022-12-18 13:01 GMT

சபரிமலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால், அடுத்த 3 நாள்களுக்கு ஆன்லைன் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது முதல், கடந்த 30 நாட்களில் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால், நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம்போர்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால், 3 நாட்களுக்கு முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்