"கோயிலில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?..."திரண்ட பக்தர்கள்...திக்குமுக்காடிய திருச்செந்தூர்

Update: 2023-03-06 13:24 GMT

தமிழ்க் கடவுள் முருகனின் 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது... முருகன் குமரவிடங்க பெருமானாக வலம் வர, மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார்... அப்போது, அவரது உடன் பிறந்த சகோதரர் கதிரேசன்ஆதித்தனும் உடனிருந்தார்... இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து மனமுருக சாமி தரிசனம் செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்