மதுரை வாடிப்பட்டி அருகே, இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விடச் சென்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-04-15 02:33 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அருகே, இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர். அப்போது, சண்டையை விலக்கி விடச் சென்ற மணிகண்டன் என்பவர் மீது, ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், சண்டையை விலக்க நீ யார் என்று கூறி, சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பெண்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்