கோலாகலமாக நடைபெற்ற திருமணம்... சடங்குகள் முடிந்து தாய் வீட்டிற்கு சென்ற மணப்பெண் எடுத்த விபரீத முடிவு

Update: 2023-03-30 14:30 GMT

கரூர் மாவட்டம் சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் ரம்யா. இவருக்கும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஸ் என்பவருக்குமிடையே கடந்த 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து, தாயாரின் வீட்டிற்கு சென்ற மணப்பெண், அங்கு தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்