இட்லியில் கரப்பான் பூச்சி - ஹோட்டலில் நடந்த வாக்குவாதம் - சென்னை மதுரவாயலில் பரபரப்பு

Update: 2023-07-11 02:32 GMT

மதுரவாயல் ஏரிக்கரையைச் சேர்ந்த மனோஜ் என்பவர், வானகரத்தில் உள்ள உணவகத்தில் நேற்றிரவு இட்லி வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்தபோது இட்லியில் கரப்பான் பூச்சி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதனை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். பின்னர், இதுகுறித்து தொலைபேசியில் உணவகத்தை தொடர்பு கொண்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொலைபேசி வாயிலாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்த நிலையில், இன்று கரப்பான் பூச்சி இருந்த இட்லியுடன் மனோஜ், அந்த உணவகத்துக்கு வந்து காண்பித்து முறையிட்டார். இதனால், அந்த உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்