நள்ளிரவில் நிலநடுக்கம்.. அபார்ட்மென்ட்கள் குலுங்கிய காட்சி.. தூக்கம் தொலைத்து கதறிய மக்கள்

Update: 2024-04-23 04:59 GMT

தைவானில் அடுத்த‌டுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வரும் நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹுவாலியன் கவுன்டி ஹால் பகுதியில் இருந்து தெற்கு தென்மேற்கு கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கங்கள் அடுத்த‌டுத்து ஏற்பட்டு வந்த‌ன. ரிக்டர் அளவில் 3, 4, 5 என்று பதிவாகி வந்த நிலையில், நள்ளிரவு 11.56 மணிக்கு 6.0 ரிக்டராகவும், 12.03 மணிக்கு 6.1 ரிக்டராகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவதால் மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்