கொரோனா பரவல் அச்சம் - இரவில் வெறிச்சோடிப் போகும் காபூல்

கொரோனா பரவல் காரணமாக இரவு நேரத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Update: 2021-08-29 09:40 GMT
கொரோனா பரவல் காரணமாக இரவு நேரத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவப் படையினரின் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் விமான நிலையம் தவிர்த்து இதர இடங்கள் இரவு நேரங்களில் வெறிசோடி காணப்படுகின்றன. கடைகள் விரைவாகவே இரவு நேரங்களில் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் குறைந்து விடுகிறது. கொரோனா பரவல் அச்சத்தால் ஒரு சில இடங்களில் மருந்துக் கடைகளும் மூடப்பட்டு விடுவதால் மக்கள் அவதிக்காளாகி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்