மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை... பிரதமர் மோரிசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

Update: 2021-02-21 10:24 GMT
ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். அந்நாட்டு அரசு பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அங்கு சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கு அரசு ஆயத்தமான நிலையில், தடுப்பூசிக்கு எதிராக மெல்போர்ன், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இக்காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்