இலங்கையில் 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் - தமிழகத்தில் இருந்து கடத்தல்

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-11-26 10:02 GMT
தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். புத்தளம் பகுதியில் அமைந்துள்ள உப்பளம் ஒன்றில், இலங்கை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, களஞ்சியம் சாலையில், ஆயிரம் கிலோ மஞ்சள், பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சளை பறிமுதல் செய்த போலீசார்,  புத்தளத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்