தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமர் பதவி விலக தொடந்து கோரிக்கை

தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-10-26 05:19 GMT
தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிராக  3 மாதங்களாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்  ராணி போல் வேடமணிந்த பலர் கலந்து கொண்டனர். மன்னரின் முடியாட்சிக்கு எதிராக போராடவில்லை என்றும், தங்களுக்கு பேச்சு சுதந்திரம்  உள்ளிட்ட உரிமைகள் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள்  கூறினார். இதனை வலியுறுத்தி அனைவரும் செல்போன் லைட்டை எரியவிட்டு முழக்கமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்