இறந்த நிலையில் கரை ஒதுங்கும் சீல்கள் - கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் வேதனை

தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இறந்த நிலையில் சீல்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

Update: 2020-10-24 07:53 GMT
தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இறந்த நிலையில் சீல்கள் கரை ஒதுங்கி வருகின்றன. நமீபிய நாட்டில் உள்ள பல்வேறு கடற்கரைகளில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீல்கள் கரை ஒதுங்கி இருப்பதாக, தனியார் தொண்டு நிறுவன அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனிடையே, வால்விஸ் விரிகுடா பகுதியில் உள்ள கடற்கரையில் ஏராளமான சீல்கள் கரை ஒதுங்கின. சீல்கள் இறந்த நிலையில் தொடர்ந்து கரை ஒதுங்கி வருவதால், கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்