"லிபியா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" - போப் ஆண்டவர் கோரிக்கை

லிபியாவில் நடக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் பேச வேண்டும் என போப் ஆண்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-06-14 17:01 GMT
லிபியாவில் நடக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் பேச வேண்டும் என போப் ஆண்டவர் கோரிக்கை விடுத்துள்ளார். வாடிகன் நகரில் பொதுமக்கள் முன் பேசிய அவர், லிபியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றும், புலம்பெயர்ந்தோர் மற்றும் தஞ்சம் புகுந்துள்ளோரை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரினார். கடாபியை வெறியேற்றிய பின்னர், எண்ணெய் உற்பத்தி நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் லிபியா பிளவுபட்டுள்ளதாகவும் போப் ஆண்டவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் இடைவெளி மற்றும் முகக் கவசத்துடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்