கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் உயிரிழப்பு - சரிந்து வரும் உயிரிழப்புகள் - பிரிட்டன் அமைச்சர் தகவல்

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 170 ஆக உள்ளது.

Update: 2020-05-18 03:57 GMT
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 170 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு குறைவு என்றும், இதன் மூலம், உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டு வணிகத்துறை அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஞாயிறன்று உயிரிழப்புகள் 468 ஆக இருந்தது என்றார். இங்கிலாந்தில், 24 லட்சத்து 3 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 559 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்