"கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்" - டிரம்ப்-க்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பிரச்சனையை அரசியலாக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு உலக சுகாதார நிறுவனம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சனையை அரசியலாக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு உலக சுகாதார நிறுவனம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் பொது இயக்குநர் டெட்ராசிடம், நிதி உதவியை நிறுத்தப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆவேசமாக பதிலளித்த அவர் , மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி கவலைப்படப்போவதில்லை என கூறினார். சீன ஆதரவு நிலைப்பாடு என்ற டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த அவர் கொரோனா வைரஸ் பிரச்னையை அரசியலாக்கினால் மேலும் பிணக்குவியலை உலகம் காண நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். பிணங்களைக் காண விரும்புவர்கள் தாராளமாக அரசியல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.