"பயங்கரவாதம் பரப்புவதை நிறுத்துங்கள் - சொந்த மக்கள் நலனுக்காக உழையுங்கள்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரான் அரசு அணு ஆயுதங்கள் தேடுவதையும் பயங்கரவாதத்தை பரப்புவதையும் கைவிட்டு சொந்த நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்க தொடங்க வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2020-02-05 06:59 GMT
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஈரானின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளதாகவும், இதனை சரி செய்ய,  அமெரிக்கா உதவும் என்றும், ஆனால் ஈரான் அரசு முட்டாள்தனமாக உதவி கேட்காமல் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், கொரோனா வைரசை ஒழிக்க சீன அரசுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த காட்சிகள், காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 
Tags:    

மேலும் செய்திகள்