தாய்லாந்தில் கொரோனா வைரஸால் மக்கள் அச்சம் : முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு

தாய்லாந்தில், முக கவசம் தயாரிப்பு பணிகளை அந்நாட்டு அரசு தீவிரபடுத்தியுள்ளது.

Update: 2020-01-31 03:49 GMT
தாய்லாந்தில், முக கவசம் தயாரிப்பு பணிகளை அந்நாட்டு அரசு தீவிரபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பது, உலகளவில் மக்களை அச்சம் அடைய செய்துள்ளது. தாய்லாந்தில் , கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பொதுமக்கள் முக கவசங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் அங்கு முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து கடைகளில் முக கவசங்கள் இல்லை என பதாகை வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்