"2 நாட்கள் எந்த ஒரு நிகழ்வும் நடத்த வேண்டாம்" - மாவீர‌ர் நாளுக்கு யாழ்ப்பாண பல்கலை-யில் தடை

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மாவீர‌ர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

Update: 2019-11-26 21:23 GMT
யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மாவீர‌ர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைகழக வளாகத்திற்குள் உள்ள நினைவிடத்தில், மாவீர‌ர் நாள் நினைவேந்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு,  மாணவர்கள் எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என பல்கலை கழக அதிகாரி கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்