" ராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை" - இலங்கை ராணுவ தளபதி

இலங்கை ராணுவத்தின் 23ஆவது தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Update: 2019-08-27 10:48 GMT
இலங்கை ராணுவத்தின் 23ஆவது தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டு மக்கள் அனைவரையும் சரிசமமாகவே பார்ப்பதாகவும், இலங்கையில் உள்ள அனைவருக்கும் முழு பாதுகாப்பு வழங்குவதே தனது பணி எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து  ஒரு ராணுவ முகாமை கூட அகற்றப்போவதில்லை என்றும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்