இலங்கையில் வேலை வழங்கக்கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிப்பு

இலங்கையில் வேலை வழங்க கோரி ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்ற பட்டதாரிகளை கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீசார் கலைத்தனர்.

Update: 2019-07-30 02:42 GMT
இலங்கையில் வேலை வழங்க கோரி ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்ற பட்டதாரிகளை கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீசார் கலைத்தனர். கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கலைத்தனர். இதில் இளம் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்