பிரெஞ்ச் ஓபன் அரையிறுதி போட்டி : ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் ஆடவர் அரையிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்(NOVAK DJOKOVIC) தோல்வியை தழுவி ரசிர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

Update: 2019-06-09 05:18 GMT
பிரெஞ்ச் ஓபன் ஆடவர் அரையிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்(NOVAK DJOKOVIC) தோல்வியை தழுவி ரசிர்களுக்கு அதிர்ச்சியளித்தார். மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டி நேற்று தொடர்ந்து நடந்தது. இதில் ஆஸ்திரியாவின் டோமினிக் தீம்(DOMINIC THIEM) ஆதிக்கம் செலுத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் 6-2, 3-6, 7-5, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை, டோமினிக் தீம் வீழ்த்தினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் உடன் டோமினிக் தீம் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்