பாகிஸ்தானில் இருந்து படகில் போதை பொருள் கடத்த முயற்சி

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-22 03:55 GMT
குஜராத் கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குஜராத் மாநிலம் ஜக்கு கடலோர பகுதியில் ரோந்து பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த படகு ஒன்று எச்சரித்தும் நிற்காமல் சென்றது. இதனால்  அந்த படகை கடலோர காவல் படையினர் துரத்தி சென்றனர். பின்னர் படகை சுற்றிவளைத்து சோதனை நடத்திய போது 195 பாக்கெட்டுகளில் சுமார்  200 கிலோ ஹெராயின் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  படகில் வந்த மீனவர்களை கைது செய்து அவர்களிடம் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்