உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே வலியுறுத்தல்

பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியாகும் எச்சரிக்​கையின் உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-05-11 03:11 GMT
பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியாகும் எச்சரிக்​கையின் உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாளை மறுநாள் கிறிஸ்தவ பள்ளிகள் திறக்கப்படும்​ என அரசு அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். ஆனால், அன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்து ராஜபக்சே கேள்வி எழுப்பினார். மற்றொரு பக்கம், விஷவாயு தாக்குதல் நடத்தப்படும் என தகவல் உலா வருகிறது என்றும் நாட்டில் என்ன தான் நடக்கிறது என்பதை அரசு தெளிவுபடுத் வேண்டும் என்றும் ராஜபக்சே கேட்டுக்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்