கந்தசாமி கோயில் அருகே வெடிபொருட்களா? - போலீசார் சோதனை நடவடிக்கையால் திடீர் பரபரப்பு

இலங்கை யாழ்ப்பாணம், இனுவில் கந்தசுவாமி ஆலயம் அருகே வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-26 08:13 GMT
இலங்கை யாழ்ப்பாணம், இனுவில் கந்தசுவாமி ஆலயம் அருகே வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு நின்றிருந்த இரு சக்கர வாகன உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தீவிர சோதனையில், அங்கு வெடிபொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார், அங்கிருந்து புறப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்