விமானத்தை கடத்த முயற்சி : வங்கதேசத்தில் பரபரப்பு

வங்கதேசத்தில்,துபாய் செல்லும் விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-24 16:59 GMT
வங்கதேசத்தில், துபாய் செல்லும் விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சிட்டாகாங்க் வழியாக துபாய் செல்லும் விமானம் புறப்பட்டது. சிட்டாகாங்கில் உள்ள ஷா அமானத் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து விமானம் புறப்பட தயாரான நிலையில் பயங்கரவாதிகள் விமானத்தை கடத்துவதாக தகவல் பரவியது. இதையடுத்து விமானத்தில் இருந்த 142 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை கடத்த முயன்ற துப்பாக்கி ஏந்தி நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்