சீனாவில் உள்ள எர்டோஸ் நகரில் அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவில் உள்ள பாண்டா கரடிகள் செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. விளையாடி அசந்து போகும் பாண்டாக்கள், பனியில் சமத்து பிள்ளை போல அமர்ந்து கொண்டு, மூங்கில்களை உண்ணுகின்றன. அதே சமயம் உடம்பில் சக்தி கிடைத்தவுடன், உற்சாகமாய் ஊஞ்சலில் ஆட்டம் போடுவதும், தலை கீழாக உருள்வதும் என மகிழ்கின்றன.