இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - பிரபா கணேசன்

இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-08 22:03 GMT
ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே இவர்களில்  யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். மன்னாரில் கட்சி  அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனாதிபதி மைத்ரி சிரிசேனா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சே என அனைவரும் இனவாதிகள்  என்றார்,,, அவர்கள் சார்ந்த கட்சிகள் இலங்கை தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றியது இல்லை என்றும் பிரபா கணேசன் குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்