"வடக்கு பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை"- அதிபர் சிறிசேன

இலங்கையில், வடக்கு பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-29 18:31 GMT
இலங்கையில், வடக்கு பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற தேசிய நெல் விதைப்பு நிகழ்வில் பேசிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.  வெளிநாட்டு நிதியுதவிகளை எந்த அமைச்சகத்தின் கீழ் பயன்படுத்துவது, யார் பயன்படுத்துவது என்ற சர்ச்சையே மூன்றரை ஆண்டுகளாக நீடித்ததாகவும்,  அந்த பொறுப்புகளை வகித்தவர்கள், வடக்கு மக்களுக்காக வீடுகளை கூட கட்டித்தரவில்லை எனவும் அதிபர் சிறிசேனா கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்