இலங்கை பிரதமராக ரனில் நீடிப்பார் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடி

இலங்கை பிரதமராக ரனில் நீடிப்பார் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடி அறிவிப்பு.

Update: 2018-10-28 10:14 GMT
இலங்கையில் கடந்த  சில நாட்களாக பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்கிறது. 2 தினங்களுக்கு முன் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமர் ஆக பதவி ஏற்றார் .அவருக்கு அதிபர் ஸ்ரீ சேனா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

இதனிடையே, இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே தொடர்ந்து நீடிப்பார் என நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார். மூன்று நாட்களாக முன்பு ரனிலுக்கு பதில், ராஜபக்சேவை பிரதமராக சிறிசேன நியமித்த நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பு இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் வரை, ரனில் விக்ரமசிங்கவின் சிறப்பு உரிமைகளை பாதுகாக்குமாறு தமக்கு கடிதம் கிடைத்துள்ளதாகவும் அதிபர் சிறிசேனாவிடம், சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்