அமெரிக்கா வங்கியில் நடந்த துப்பாக்கி சூடு : ஆந்திர இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள வங்கியில் நடந்த துப்பாக்கி சூட்டின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2018-09-08 07:49 GMT
சின்சினாட்டி நகரின் ஃபவுன்டைன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள  வங்கி ஒன்றில் நுழைந்த 29 வயது இளைஞர் ஒமர் என்ரிக் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 4 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு ஒமர் என்ரிக்கை சுட்டு வீழ்த்தினர். 

அந்த கொலையாளியால் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த  பிருத்வி கன்டேபி என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. வங்கியில் பணியாற்றி வந்த பிருத்வியின் உடலை இந்தியா அனுப்ப அங்குள்ள தெலுங்கு அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்