இரண்டு லாரிகள் மோதி விபத்து- 2 பேர் பலி

வடக்கு இத்தாலியில் லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Update: 2018-08-07 07:41 GMT
வடக்கு இத்தாலியில் லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். போலோக்னா நகரின் விமான நிலையம் அருகே கார்களை ஏற்றி கொண்டு வந்த லாரியும் ரசாயனம் அடங்கிய டேங்கர் லாரியும் மோதி கொண்டன. இதில் தீ பற்றி எரிந்த லாரிகள் திடீரென்று வெடித்தன சிதறின. இதில் பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்த கார்களும் தீக்கு இரையாகியதோடு வெடித்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்