பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பலப்படுத்துவேன் - பதவி ஏற்க இருக்கும் இம்ரான்கான் உறுதி

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் தெஹ்ரி - இ- இச்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் அந்நாட்டின் பிரதமர் ஆக அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.

Update: 2018-07-26 14:53 GMT
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் தெஹ்ரி - இ- இச்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் அந்நாட்டின் பிரதமர் ஆக அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி இம்ரான் கானின் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றி முதலிடம் வகிக்கிறது. 

எனவே, சில சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இம்ரான்கான் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதனிடையே, லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான்கான்,பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பலப்படுத்துவேன் என உறுதி அளித்தார். 

ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண விரும்புவதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது இம்ரான்கான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்