பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களுக்கு.. "விவரங்களில் தவறு இருந்தால்.." - அரசுத் தேர்வுத்துறை இயக்குநர்

Update: 2023-11-17 02:51 GMT

2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்காக, EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள் வழங்கப்பட உள்ளது. இந்த தகவல்களை பயன்படுத்தி பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது. எனவே மாணவர்களின் தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து, திருத்தங்கள் இருந்தால் அவற்றை உடனே சரி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 30-ஆம் தேதிவரை இதற்கான பணிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் விவரங்களில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பு ஏற்க நேரிடும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, கல்வித்துறை அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்