குரங்கால் கொடூரமாக பிரிந்த சிலரின் இளைஞரின் உயிர்..விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-09-07 14:40 GMT

குரங்கால் கொடூரமாக பிரிந்த சிலரின் இளைஞரின் உயிர்..விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி - சென்னையில் நடந்த பகீர் சம்பவம்

அரியவகை குரங்கு கடத்தலில் ஏற்பட்ட பகையில், சென்னை இளைஞரை பாங்காங்கில் இருந்து கொண்டு, கடத்தல் கும்பலின் தலைவன் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை, புரசைவாக்கம் சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கொளத்தூர் அருகே வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று கடையில் இருந்து வீடு திரும்பிய பிரகாஷை, மர்மகும்பல் வீட்டின் வாசலில் வைத்து அரிவாளால் தாக்கி தப்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், தாய்லாந்து, பப்புவா, நியூகினியா போன்ற நாடுகளில் இருந்து, அரியவகை உயிரினங்களை சட்டவிரோதமாக வாங்கி பிரகாஷ் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதில், கடந்த பிப்ரவி மாதம் பாங்காங்கில் உள்ள மதன் என்பவரிடம் இருந்து 4 உராங்குட்டான் வகை குரங்குகளை பிரகாஷ் வாங்கியிருக்கிறார். இது ஏற்கனவே மதனிடம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இருந்து வந்த சென்னை, மண்ணடியை சேர்ந்த பெரோஸ் என்பவருக்கு தெரியவந்தது. இந்நிலையில், மதன் தனக்கு பணம் தர வேண்டும் எனக்கூறி அந்த உராங்குட்டான் வகை குரங்குகளை பெரோஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தான் கூறிய நபருக்கு இன்னும் குரங்குகள் சென்று சேராததால் பிரகாஷை அழைத்து மதன் விசாரித்த போது, பிரகாஷ் நடந்ததை கூறியுள்ளார். அப்போது, பெரோஸ் தான் குரங்குகளை வாங்கவில்லை எனக்கூறி கைவிரித்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரகாஷ் தன்னை ஏமாற்றுவதாக எண்ணி பாங்காங்கில் இருந்தே மதன் கூலிப்படையை ஏவி பிராகாஷை தாக்கியது தெரியவர, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்