முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ஜெய பிரதாவை கைது செய்ய உத்தரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் விதி மீறல் தொடர்பாக ஜெய பிரதா மீது வழக்கு தொடரப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கு விசாரணைக்கு ஜெய பிரதா ஆஜராகாமல் இருந்ததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக ராம்பூர் நீதிமன்றம் அறிவித்தது. மேலும், ஜெய பிரதாவை கைது செய்து வரும் 6ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது