ஊட்டியில் யாருக்கெல்லாம்...இ-பாஸ் வேண்டாம்

Update: 2024-05-07 13:53 GMT

நீலகிரி மாவட்ட எல்லை மற்றும் கூடலூரை ஒட்டிய தமிழக - கேரள எல்லைகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், இ-பாஸ் பெற்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், நீலகிரி-க்குள் நுழையும் வாகனங்கள் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பேருந்துகளில் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை, நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் இ-பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இ-பாஸ் எடுக்காமல் வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு ஒவ்வொரு மாநில எல்லை சோதனைச்சாவடிலும் க்யூ ஆர் மூலமாக உடனடியாக இ-பாஸ் பெற்று தருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்