பரந்தூரில் விமான நிலையம் - நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில், பரந்தூர் விமான
நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்படும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு கொடுக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாம்
தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விளைநிலங்களை அழித்து உருவாக்கப்படும் விமானநிலையம் தேவை தானா என தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்றார்.