"அமைச்சர் மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார்" - மேடையில் அமைச்சரை புகழ்ந்த முதல்வர்
"அமைச்சர் மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார்" - மேடையில் அமைச்சரை புகழ்ந்த முதல்வர்
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. சர்வதேச மற்றும்
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற ஆயிரத்து 130 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
அவர்களுக்கு 16.28 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கினார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு மற்றும் விளையாட்டு
வீரர்களுக்கான ஆடுகளம் உதவி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி
நடத்தியதன் மூலம் உலகமே தமிழகத்தை வியந்து பார்ப்பதாக பெருமிதம் தெரிவித்தனர்.