மத்திய அரசுக்கு அமைச்சர் கே.என்.நேரு வைத்த கோரிக்கை
காவிரி, பாலாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் 500 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்த புதிய திட்டம் வகுக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு
கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கில்
பேசிய அமைச்சர், திட்டங்களை நிறைவேற்ற நெடுஞ்சாலையை போல் குடிநீர் வழங்கல் துறைக்கும் ஒன்றிய அரசு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.