தலைக்கேறிய கஞ்சா போதை - மாறி மாறி பிளேடால் தாக்கிய இளைஞர்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு

Update: 2024-02-29 02:36 GMT

திருவள்ளூர் அடுத்த பெரிய குப்பம் ரயில்வே மேம்பாலம் கீழே, நண்பர்களான கார்த்திக், விக்கி, மதன் ஆகிய 3 பேர், மூவரும் இணைந்து அப்பகுதியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர்.

இதில் விக்கி, மதன் ஆகிய இருவருக்கும் போதை தலைக்கேறி வாக்குவாதம் ஏற்படவே, இருவரும் மாறி மாறி பிளேடால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், பிளேடால் தாக்கியதில் ரத்தம் வழிந்தபடி இருந்த விக்கி, மதன் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து, போலீசார் முன்பாகவே ரகளை செய்து அங்கிருந்தவர்களை தாக்கியதால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்