இதெல்லாமா திருடுவீங்க... கரண்ட் இல்லாமல் தவித்த மக்கள் காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-01-07 15:54 GMT

ராமநாதபுரம் மகாத்மா காந்தி நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நள்ளிரவு 12 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த பொதுமக்கள், காலையில் எழுந்து பார்த்தபோது மின் வயர்கள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மின்சாரத்தை துண்டித்து நூதன முறையாக மின் வயர்களை திருடிச் சென்ற மர்ம கும்பல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வயர் திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்